• முகப்பு
  • அரசியல்
  • சஜித் தமிழர் சகோதரர்களுக்கு ​நேர்மையான செய்தியை வழங்கி இருக்கிறார்

சஜித் தமிழர் சகோதரர்களுக்கு ​நேர்மையான செய்தியை வழங்கி இருக்கிறார்

ஐ. ஏ. காதிர் கான்

UPDATED: Sep 7, 2024, 10:34:55 AM

 சஜித் பிரேமதாஸவின் தலைமையில் நாங்கள் இலங்கை அடையாளத்தைக் கொண்ட ஒரு நாட்டை, ஒரு அரசாங்கத்தை உருவாக்க இருக்கின்றோம்" என, பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.

original/img-20240901-wa0081
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

 அவர் மேலும் தெரிவிக்கையில்,

 இலங்கையில் வடக்கு, கிழக்கில் வாழும் எமது உடன் பிறப்புக்களுக்கு நான் ஒரு நற்செய்தியைக் கூற விரும்புகின்றேன். ஐக்கிய மக்கள் கூட்டணி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தான், ஈழத் தமிழர் சகோதரர்களுக்கு உரிய, உரித்தான, ​நேர்மையான செய்தியை வழங்கி இருக்கிறார்.

   13 ஆவது திருத்தம், மாகாண சபைகளை அமர்த்தும் சட்டம், இவை தொடர்பான தனது உத்தரவாதத்தை அவர் வழங்கி இருக்கிறார்.

   அது மட்டுமின்றி, 13 ஆவது திருத்தச் சட்டத்தையும் அமுல் படுத்துவதாகத் தெரிவித்து இருக்கிறார்.

 வடக்கு, கிழக்கில் இருக்கும் பெரிய பிரச்சினை என்ன வென்றால், அங்கே பாரிய குடி பெயர்வு இடம்பெறுகிறது.

 13 ஆவது திருத்தச் சட்டம், மாகாண சபைகளை அமைக்காவிட்டால், சமஷ்டி வந்தாலும் கூட அங்கு வாழ்வதற்கு தமிழ் மக்கள் எஞ்சி இருக்க மாட்டார்கள். நாங்கள் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும்.

அதற்கு வாய்ப்பு வழங்கக் கூடிய ஒரே தலைவர் சஜித் பிரேமதாஸ தான்" எனக் குறிப்பிட்டுக் காட்டினார்.




VIDEOS

Recommended