• முகப்பு
  • போக்சோ
  • கும்பகோணம் அருகே உள்ள அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி ஆசிரியர்.

கும்பகோணம் அருகே உள்ள அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி ஆசிரியர்.

ரமேஷ்

UPDATED: Feb 14, 2024, 3:53:34 PM

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுக்கா திருப்பனந்தாள் ஒன்றியம் குறிச்சி பகுதியை சேர்ந்தவர் கண்ணன் மகன் தமிழரசன்(37).

இவன் திருவாய்ப்பாடியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு அனைத்து பிரிவு பாடம் எடுக்கும் ஆசிரியராக தமிழரசன், பணியாற்றி வருகிறான். 

Also Read : நாடு முழுவதும் தேர்தலை நடத்தும் அதிகாரிகளை பிரதமரே நியமிப்பார் என்றால் ஜனநாயகம் எங்கே இருக்கிறது?

இந்நிலையில், அதே பள்ளியில் படிக்கும் 13 வயது சிறுமிக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளதாக.

மாணவி தனது பெற்றோரிடம் தகவல் தெரிவிக்கவே, அவர்கள் மாணவியுடன், திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். 

புகாரின் பேரில் திருப்பனந்தாள் காவல்துறையினர், ஆசிரியரான தமிழரசன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தன் மீது மாணவி புகார் அளித்திருப்பதை அறிந்து ஆசிரியர் தமிழரசன் தலைமுறைவாகியுள்ளார்.

Also Read : திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை செய்த இளைஞன் போக்சோவில் கைது

தற்போது காவல்துறையினர் அவனை தேடி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

VIDEOS

RELATED NEWS

Recommended