திருச்சி அருகே சொத்து தகராறு காரணமாக அண்ணனை ஓட ஓட வெட்டிக் கொன்ற தம்பி.
JK
UPDATED: Mar 12, 2024, 8:28:59 PM
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள பெருமாள்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருடைய தம்பி சந்திரசேகர் இருவருக்கும் சொத்து தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
Also Read : நாக்க புடுங்கறா மாதிரி கேட்ட இளையராஜா
இந்நிலையில் இரவு ஏழு முப்பது மணி அளவில் கிருஷ்ணமூர்த்தி தனது வீட்டின் அருகே நின்று கொண்டு இருந்த பொழுது அங்கு வந்த தம்பி சந்திரசேகர் அண்ணனை அரிவாளால் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.
Also Read : தமிழகத்தை மிரட்டும் செக்ஸ் டூரிஸம்
இதனால் அண்ணன் கிருஷ்ணமூர்த்தி பயந்து ஓடி உள்ளார் அவரை ஓட ஓட துரத்தி சென்ற தம்பி சந்திரசேகர் அரிவாளால் வெட்டியதில் தலையில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்தார்.
தகவல் அறிந்து தோழர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்ற கிருஷ்ணமூர்த்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனை காமித்து வைத்தனர்.
Also Read : i 5 மாடல் கம்ப்யூட்டருக்கு 4.5 லட்சம் செலவு செய்வீர்களா கொந்தளித்த கவுன்சிலர்.
அதனைத் தொடர்ந்து அவரது தம்பி சந்திரசேகரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கடந்த 2020 ஆம் ஆண்டு இதே சொத்து தகராறு பிரச்சனையின் காரணமாக தம்பி சந்திரசேகரை அண்ணன் கிருஷ்ணமூர்த்தி அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.
Also Read : அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி கள நிலவரம்
இதனால் ஆத்திரத்தில் இருந்த தம்பி சந்திரசேகர் இன்று பழிக்கு பழியாக அண்ணன் கிருஷ்ணமூர்த்தியை வெற்றி கொன்றதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.