• முகப்பு
  • கல்வி
  • வட்டியில்லா கல்விக்கடன் திட்டத்தின் கீழ் ஏழாயிரம் மாணவர்களுக்கு கடன்

வட்டியில்லா கல்விக்கடன் திட்டத்தின் கீழ் ஏழாயிரம் மாணவர்களுக்கு கடன்

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Sep 8, 2024, 2:05:18 AM

வட்டியில்லா கல்விக்கடன் திட்டத்தின் கீழ் ஏழாயிரம் மாணவர்களுக்கு கடன் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை இம்மாதம் 9ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை அழைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆண்டு அதிகபட்சமாக பதினைந்து லட்சம் ரூபாய் வரை, ஐந்து பிரிவுகளின் கீழ் கடன் பெறலாம் என்றும், பதினெட்டு உயர்கல்வி நிறுவனங்களில் பட்டப் படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

original/img-20240901-wa0081
 பொறியியல் படிப்புகளுக்கு பதினைந்து லட்சம் ரூபாயும், அறிவியல் படிப்புகளுக்கு பன்னிரெண்டு லட்சம் ரூபாயும், தகவல் தொழில்நுட்ப படிப்புகளுக்கு பத்து லட்சம் ரூபாயும் பெறலாம்.

 மேலாண்மை படிப்புகளுக்கு பத்து லட்சம் ரூபாயும், சமூக அறிவியல் படிப்புகளுக்கு எட்டு லட்சம் ரூபாயும் கடன் தொகை.

இந்தக் கடன் தொகையைப் பெறுவதற்கு இரண்டு உத்தரவாததாரர்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளமையும் விசேட அம்சமாகும்.

 தாய் அல்லது தந்தை முதல் உத்தரவாததாரராக கையொப்பமிட வேண்டும் மற்றும் கடன் தொகையை அங்கீகரிக்கும் வங்கியின் தேவைக்கு ஏற்ப இரண்டாவது உத்தரவாததாரரை சமர்ப்பிக்க வேண்டும்.

 கடன் பெற்ற இருநூற்றி தொண்ணூற்று இரண்டு மாணவர்கள் கடன் தொகையை செலுத்த தவறியதால் இம்முறை உத்தரவாததாரர்களின் தேவை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 இவ்வருடம் எட்டாவது தடவையாக இத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதுடன் கடந்த 2022 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் மாத்திரமே விண்ணப்பிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

VIDEOS

Recommended