ஆயுத பூஜைக்காக கடையை சுத்தம் செய்த இளைஞர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு.

சசிகுமார்

UPDATED: Oct 3, 2024, 7:48:26 PM

தர்மபுரி மாவட்டம் 

அரூர் கடை வீதியில் மூர்த்தி என்கிற நகை கடையில் கணபதிப்பட்டி பகுதியைச் சேர்ந்த வேலன் என்பவர் சேல்ஸ்மேனாக வேலை செய்து வந்துள்ளார்.

வருகின்ற ஆயுத பூஜைக்காக கடையை சுத்தம் செய்யும்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து துடி துடித்து விழுந்துள்ளார்.

இதனை அறிந்த அக்கம் பக்கத்தில் உள்ள நபர்கள் உடனடியாக ஆட்டோவை வரவழைத்து அரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

Latest Dharmapuri News In Tamil

அப்போது சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு பரிசோதனை செய்ததில் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர் கூறியுள்ளார். 

குறிப்பாக வேலனுக்கு சிறு வயதாக இருக்கும் பொழுது இவருடைய தந்தை இறந்துள்ளார்.

இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளன அதில் பிறந்து மூன்று மாதங்களே ஆன ஒரு கைக்குழந்தை உள்ளது.

Breaking News Today In Tamil 

இவருடைய தாயும் தினதோறும் கூலி வேலைக்கு சென்று பிழைப்பை நடத்தி வருகிறார். 

இந்த நிலையில் வேலனின் உயிரிழப்பை தாங்க முடியாமல் இவருடைய மனைவி மற்றும் உறவினர்கள் அல்லது காட்சி பார்ப்பவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

உயிரிழந்த வேலனின் உடல் அரூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.  அரூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

 

VIDEOS

Recommended