• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாணவர் பெருமன்றத்தினர் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாணவர் பெருமன்றத்தினர் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

தருண் சுரேஷ்

UPDATED: Jul 4, 2024, 7:34:24 AM

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மன்னார்குடியில் மன்னை இராஜகோபால சுவாமி அரசினர் கலைக்கல்லூரியில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

ஏழை எளியமாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் வலியுறுத்தி பல ஆண்டுகளாக தமிழகத்தில் குரல் எழுந்து வருகிறது.

இந்நிலையில் நீட் தேர்வில் முறைகேடு நடந்திருப்பது சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசினர் கலைக் கல்லூரி வாயில் முன்பு அணைத்திந்திய மாணவர்கள் பெருமன்றம் சாா்பாக மத்திய மோடி அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

VIDEOS

Recommended