- முகப்பு
- மாவட்டச் செய்தி
- கிருஷ்ணகிரியில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளினை முன்னிட்டு அதிமுக சார்பில் திருஉருவச்சிலைக்கு மரியாதை.
கிருஷ்ணகிரியில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளினை முன்னிட்டு அதிமுக சார்பில் திருஉருவச்சிலைக்கு மரியாதை.
சசி குமார்
UPDATED: Sep 15, 2024, 9:37:44 AM
கிருஷ்ணகிரி மாவட்டம்
திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்றுவித்தவரும், கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற தாரக மந்திரத்தை முழங்கியவருமான பேரறிஞர் பெருந்தகை பேரறிஞர் அண்ணா
116 வது பிறந்தநாள் விழா நாள் நாடுமுழுவதும் கழகத் தோழர்களால் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இதனையடுத்து கிருஷ்ணகிரி நகர அதிமுக செயலாளர் கேசவன் தலைமையில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த தினம் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது,
அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா
இதில் கிருஷ்ணகிரி ராசு வீதியில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் திருஉருவச்சிலைக்கு கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினரும்மான
அசோக் குமார் கலந்துக் கொண்டு பேரறிஞர் அண்ணாவின் திருஉருவச்சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினார்.
அதிமுக
இதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி டவுண் பேருந்து பணிமனையில் அதிமுக அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் அண்ணாவின் திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்தும் அதிமுக கொடியினையும் ஏற்றிவைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளையும் சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் வழங்கினார்.
மேலும் இந்த விழாவில் ஏராளமானவர்கள் கலந்துக்கொண்டனர்.