- முகப்பு
- மாவட்டச் செய்தி
- தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு பூண்டி கலைவாணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை .
தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு பூண்டி கலைவாணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை .
தருண் சுரேஷ்
UPDATED: Sep 17, 2024, 10:41:25 AM
திருவாரூர்
தந்தை பெரியார் அவர்களின் 146 ஆவது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு திமுக மாவட்ட செயலாளரும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து திராவிடர் கழக தலைவர் மோகன் மாலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அனைத்து கட்சிகள் சார்பில் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
தந்தை பெரியார் பிறந்தநாள் விழா
பின்னர் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியாரின் திருவுருவப்படத்திற்கு திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளர் வாரை பிரகாஷ், தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் செந்தில், உள்ளிட்ட நகர் மன்ற உறுப்பினர்கள் சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.