• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • கிருஷ்ணகிரி அருகே உள்ள சூலாமலை கிராமத்தில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஏராளமான மக்கள் கலந்துக்கொண்டு பயன் பெற்றனர்.

கிருஷ்ணகிரி அருகே உள்ள சூலாமலை கிராமத்தில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஏராளமான மக்கள் கலந்துக்கொண்டு பயன் பெற்றனர்.

சசி குமார்

UPDATED: Sep 15, 2024, 9:17:51 AM

கிருஷ்ணகிரி மாவட்டம்

பல்வேறு இடங்களில் மாவட்ட ஆட்சியர் சரயு அவர்களின் உத்தரவின்படி பொது விநியோகத்திட்டத்தின் மூலமாக பொது மக்களின் குறைத்தீர்க்கும் கூட்டம் நடைப்பெற்றது,

இதே போல கிருஷ்ணகிரி அருகே உள்ள சூலாமலைக் கிராமத்தில் புது விநியோகத் திட்டத்தின் மூலமாக பொதுமக்களின் குறை தீர்க்கும்கூட்டம் நடைபெற்றது

மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்

குடிமைப் பொருள் வழங்கல் தனி வருவாய் ஆய்வாளர் சின்னசாமி பெறியாளர் விக்னேஷ் ஆகியார் தலைமையில் நடைபெற்ற இந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் குடும்ப அட்டைகளில் பெயர் திருத்தம் , சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் போன்ற குறைபாடுகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்பட்டது,

மேலும் இந்த சிறப்பு முகாமில் சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்க மாநில பொதுச் செயலாளரும், முன்னாள் மாவட்ட பொது விநியோகத் திட்ட ஆலோசனை குழு உறுப்பினருமான டாக்டர் சந்திரமோகன் கலந்து கொண்டு பேசுகையில்

Latest District News in Tamil

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி அனைத்து கிராமங்களிலும் பொது விநியோகத் திட்டம் சார்பில் மக்கள் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல் ,கடை மாற்றம், ரேஷன் கடை குறைகள் குறித்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது. 

இதற்காக தமிழக அரசுக்கும் , மாவட்ட நிர்வாகத்திற்கும் மாவட்ட ஆட்சியர் , மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் , மாவட்ட வழங்கல் அலுவலர் ஆகியோருக்கு சமூக நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார்

மேலும் நிகழ்ச்சியில் நுகர்வோர் சங்க மாநில இணைச்செயலாளர் மற்றும் செய்தி தொடர்பாளர் ஜெய்சன் உளியிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

 

VIDEOS

Recommended