தினம் ஒரு திருக்குறள். 26-06-2024

தினம் ஒரு திருக்குறள்

UPDATED: Jun 25, 2024, 4:50:21 PM

குறள் 180:

இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்

வேண்டாமை என்னுஞ் செருக்கு.

மு.வரதராசன் விளக்கம்:

வி‌ளைவை எண்ணாமல் பிறர் பொருளை விரும்பினால் அஃது அழிவைத் தரும்; அப்பொருளை விரும்பாமல் வாழும் பெருமை வெற்றியைத் தரும்.

சாலமன் பாப்பையா விளக்கம்:

பின் வி‌ளைவை எண்ணாமல் அடுத்தவர் பொருளை விரும்பிக் கவர்ந்தால், அது நமக்கு அழிவைக் கொடுக்கும்; அதற்கு ஆசைப்படாத செல்வமோ வெற்றியைக் கொடுக்கும்‌.

கலைஞர் விளக்கம்:

விளைவுகளைப் பற்றி நினைக்காமல் பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்பினால் அழிவும், அத்தகைய விருப்பம் கொள்ளாதிருந்தால் வாழ்க்கையில் வெற்றியும் கிட்டும்.

English Couplet 180:

From thoughtless lust of other's goods springs fatal ill,

Greatness of soul that covets not shall triumph still.

Couplet Explanation:

To covet (the wealth of another) regardless of consequences will bring destruction. That greatness (of mind) which covets not will give victory.

Transliteration(Tamil to English):

iRaleenum eNNaadhu veqkin viRaleenum

vaeNdaamai ennunhj serukku

VIDEOS

Recommended