தினம் ஒரு திருக்குறள். 13-06-2024

தினம் ஒரு திருக்குறள்

UPDATED: Jun 12, 2024, 5:20:47 PM

குறள் 168:

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்

தீயுழி உய்த்து விடும்.

மு.வரதராசன் விளக்கம்:

பொறாமை என்று கூறப்படும் ஒப்பற்ற பாவி, ஒருவனுடைய செல்வத்தைக் கெடுத்துத் தீய வழியில் அவனைச் செலுத்தி விடும்.

சாலமன் பாப்பையா விளக்கம்:

பொறாமை எனப்படும் ஒப்பில்லாத பாவி எவனிடம் இருக்கிறதோ, அவனது செல்வத்தை அழிப்பதோடு, அவனை நரகத்திலும் அது சேர்க்கும்.

கலைஞர் விளக்கம்:

பொறாமை எனும் தீமை ஒருவனுடைய செல்வத்தையும் சிதைத்துத் தீய வழியிலும் அவனை விட்டுவிடும்.

English Couplet 168:

Envy, embodied ill, incomparable bane,

Good fortune slays, and soul consigns to fiery pain.

Couplet Explanation:

Envy will destroy (a man's) wealth (in his world) and drive him into the pit of fire (in the world to come).

Transliteration(Tamil to English):

azhukkaaRu enaoru paavi thiruchchetruth

theeyuzhi uyththu vidum

VIDEOS

Recommended