தினம் ஒரு திருக்குறள். 11-06-2024

தினம் ஒரு திருக்குறள்

UPDATED: Jun 10, 2024, 6:28:15 PM

குறள் 166:

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்

உண்பதூஉம் இன்றிக் கெடும்.

மு.வரதராசன் விளக்கம்:

பிறர்க்கு உதவியாகக் கொடுக்கப்படும் பொருளைக் கண்டு பொறாமைப்படுகின்றவனுடைய சுற்றம், உடையும் உணவும் இல்லாமல் கெடும்.

சாலமன் பாப்பையா விளக்கம்:

பிறர்க்குக் கொடுப்பதைக் கண்டு பொறாமைப் படுகிறவனின் குடும்பம், உடுக்கவும், உண்ணவும் இல்லாமல் அலையும்.

கலைஞர் விளக்கம்:

உதவியாக ஒருவருக்குக் கொடுக்கப்படுவதைப் பார்த்துப் பொறாமை கொண்டால் அந்தத் தீய குணம், அவனை மட்டுமின்றி அவனைச் சார்ந்திருப்போரையும் உணவுக்கும், உடைக்கும்கூட வழியில்லாமல் ஆக்கிவிடும்.

English Couplet 166:

Who scans good gifts to others given with envious eye,

His kin, with none to clothe or feed them, surely die.

Couplet Explanation:

He who is envious at a gift (made to another) will with his relations utterly perish destitute of food and rainment.

Transliteration(Tamil to English):

koduppadhu azhukkaRuppaan sutram utuppadhooum

uNpadhooum indrik kedum

VIDEOS

Recommended