தினம் ஒரு திருக்குறள். 05-07-2024

தினம் ஒரு திருக்குறள்

UPDATED: Jul 4, 2024, 6:47:02 PM

குறள் 186:

பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்

திறன்தெரிந்து கூறப் படும்.

மு.வரதராசன் விளக்கம்:

மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்றவன், அவனுடைய பழிகள் பலவற்றிலும் நோகத்தக்கவை ஆராய்ந்து கூறிப் பிறரால் பழிக்கப்படுவான்.

சாலமன் பாப்பையா விளக்கம்:

அடுத்தவன் குறையை அவன் இல்லாத போது எவன் கூறுகிறானோ, அவனது குறை அவன் இல்லாதபோது இன்னொருவனால் கூறப்படும்.

கலைஞர் விளக்கம்:

பிறர்மீது ஒருவன் புறங்கூறித் திரிகிறான் என்றால் அவனது பழிச் செயல்களை ஆராய்ந்து அவற்றில் கொடுமையானவைகளை அவன் மீது கூற நேரிடும்.

English Couplet 186:

Who on his neighbours' sins delights to dwell,

The story of his sins, culled out with care, the world will tell.

Couplet Explanation:

The character of the faults of that man who publishes abroad the faults of others will be sought out and published

Transliteration(Tamil to English):

piRanpazhi kooRuvaan thanpazhi yuLLum

thiRan-dherindhu kooRap padum

VIDEOS

Recommended