தினம் ஒரு திருக்குறள் 31-07-2024

தினம் ஒரு திருக்குறள்

UPDATED: Jul 30, 2024, 5:18:51 PM

குறள் 208:

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை

வீயாது அடிஉறைந் தற்று.

மு.வரதராசன் விளக்கம்:

தீய செயல்களைச் செய்தவர் கேட்டை அடைதல், ஒருவனுடைய நிழல் அவனை விடாமல் வந்து அடியில் தங்கியிருத்தலைப் போன்றது.

சாலமன் பாப்பையா விளக்கம்:

பிறர்க்குத் தீமை செய்தவர் அழிவது, அவரை அவரது நிழல் விடாது கால்களின் கீழே தங்கியிருப்பது போலாம்.

கலைஞர் விளக்கம்:

ஒருவருடைய நிழல் அவருடனேயே ஒன்றியிருப்பதைப்போல், தீய செயல்களில் ஈ.டுபடுகிறவர்களை விட்டுத் தீமையும் விலகாமல், தொடர்ந்து ஒட்டிக் கொண்டிருக்கும்.

English Couplet 208:

Man's shadow dogs his steps where'er he wends;

Destruction thus on sinful deeds attends.

Couplet Explanation:

Destruction will dwell at the heels of those who commit evil even as their shadow that leaves them not.

Transliteration(Tamil to English):

theeyavai seydhaar ketudhal nizhaldhannai

veeyaadhu atiuRainh thatru

VIDEOS

Recommended