தினம் ஒரு திருக்குறள் 27-05-2024

தினம் ஒரு திருக்குறள்

UPDATED: May 27, 2024, 11:24:01 AM

தினம் ஒரு திருக்குறள் 152:

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை

மறத்தல் அதனினும் நன்று.

மு.வரதராசன் விளக்கம்:

வரம்பு கடந்து பிறர் செய்யும் தீங்கை எப்போதும் பொறுக்க வேண்டும்; அத் தீங்கை நினைவிலும் கொள்ளாமல் மறந்து விடுதல் பொறுத்தலை விட நல்லது.

சாலமன் பாப்பையா விளக்கம்:

தீமையைத் தண்டிக்க முடியும் என்றபோதும் பொறுத்துக் கொள்க; அந்தத் தீமையை மனத்துள் வைக்காமல் மறந்தே விடுவது பொறுத்தலையும் விட நல்லது.

கலைஞர் விளக்கம்:

அளவுகடந்து செய்யப்பட்ட தீங்கைப் பொறுத்துக் கொள்வதைக் காட்டிலும், அந்தத் தீங்கை அறவே மறந்து விடுவதே சிறந்த பண்பாகும்.

English Couplet 152:

Forgiving trespasses is good always;

Forgetting them hath even higher praise;.

Couplet Explanation:

Bear with reproach even when you can retaliate; but to forget it will be still better than that.

Transliteration(Tamil to English):

poRuththal iRappinai endrum adhanai

maRaththal adhaninum nandru

VIDEOS

Recommended