தினம் ஒரு திருக்குறள் 27-04-2024

தினம் ஒரு திருக்குறள்

UPDATED: Apr 26, 2024, 6:59:03 PM

குறள் 128:

ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்

நன்றாகா தாகி விடும்.

மு.வரதராசன் விளக்கம்:

தீய ‌சொற்களின் பொருளால் விளையும் தீமை ஒன்றாயினும் ஒருவனிடம் உண்டானால், அதனால் மற்ற அறங்களாலும் நன்மை விளையாமல் போகும்.

சாலமன் பாப்பையா விளக்கம்:

தீய சொற்களின் பொருளால் பிறர்க்கு வரும் துன்பம் சிறிதே என்றாலும் அந்தக் குறை ஒருவனிடம் இருந்தால் அவனுக்குப் பிற அறங்களால் வரும் நன்மையம் தீமையாகப் போய்விடும்.

கலைஞர் விளக்கம்:

ஒரு குடம் பாலில் துளி நஞ்சுபோல், பேசும் சொற்களில் ஒரு சொல் தீய சொல்லாக இருந்து துன்பம் விளைவிக்குமானாலும், அந்தப் பேச்சில் உள்ள நல்ல சொற்கள் அனைத்தும் தீயவாகிவிடும்.

English Couplet 128:

Though some small gain of good it seem to bring,

The evil word is parent still of evil thing

Couplet Explanation:

If a man's speech be productive of a single evil, all the good by him will be turned into evil

Transliteration(Tamil to English):

ondraanunh theechchol porutpayan uNtaayin

nandraakaa thaaki vidum

VIDEOS

Recommended