தினம் ஒரு திருக்குறள் 26-09-2024

தினம் ஒரு திருக்குறள்

UPDATED: Sep 25, 2024, 6:25:53 PM

குறள் 237:

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை

இகழ்வாரை நோவது எவன்.

மு.வரதராசன் விளக்கம்:

தமக்குப் புகழ் உண்டாகுமாறு வாழமுடியாதவர் தம்மைத் தாம் நொந்து கொள்ளாமல் தம்மை இகழ்கின்றவரை நொந்து கொள்ளக் காரணம் என்ன?.

சாலமன் பாப்பையா விளக்கம்:

புகழ் பெருகுமாறு வாழமுடியாதவர் அதற்குக் காரணர் தாமே என்று தம்மீது வருந்தாமல், தம்மை இகழ்வார் மீது வருத்தம் கொள்வது எதற்காக?.

கலைஞர் விளக்கம்:

உண்மையான புகழுடன் வாழ முடியாதவர்கள், அதற்காகத் தம்மை நொந்து கொள்ள வேண்டுமே தவிரத் தமது செயல்களை இகழ்ந்து பேசுகிறவர்களை நொந்து கொள்வது எதற்காக?.

English Couplet 237:

If you your days will spend devoid of goodly fame,

When men despise, why blame them? You've yourself to blame.

Couplet Explanation:

Why do those who cannot live with praise, grieve those who despise them, instead of grieving themselves for their own inability.

Transliteration(Tamil to English):

pukazhpata vaazhaadhaar thannhoavaar thammai

ikazhvaarai noavadhu evan

VIDEOS

Recommended