தினம் ஒரு திருக்குறள் 24-07-2024

தினம் ஒரு திருக்குறள்

UPDATED: Jul 23, 2024, 4:50:02 PM

குறள் 203:

அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய

செறுவார்க்கும் செய்யா விடல்.

மு.வரதராசன் விளக்கம்:

தம்மை வருத்துவோர்க்கும் தீய செயல்களைச் செய்யாமலிருத்தலை, அறிவு எல்லாவற்றிலும் தலையான அறிவு என்று கூறுவர்.

சாலமன் பாப்பையா விளக்கம்:

தனக்குத் தீமை செய்பவர்க்கும் தீமை செய்யாது இருப்பதே, அறிவில் எல்லாம் முதன்மை அறிவு என்று கூறுவர்.

கலைஞர் விளக்கம்:

தீமை செய்தவர்க்கு அதையே திருப்பிச் செய்யாமலிருத்தலை, எல்லா அறிவிலும் முதன்மையான அறிவு என்று போற்றுவர்.

English Couplet 203:

Even to those that hate make no return of ill;

So shalt thou wisdom's highest law, 'tis said, fulfil.

Couplet Explanation:

To do no evil to enemies will be called the chief of all virtues.

Transliteration(Tamil to English):

aRivinuL ellaanh thalaiyenpa theeya

seRuvaarkkum seyyaa vidal

VIDEOS

Recommended