தினம் ஒரு திருக்குறள் 23-07-2024

தினம் ஒரு திருக்குறள்

UPDATED: Jul 22, 2024, 5:30:41 PM

குறள் 202:

தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும்.

மு.வரதராசன் விளக்கம்:

தீயசெயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மை உடையனவாக இருத்தலால், அத் தீயச் செயல்கள் தீயைவிடக் கொடியனவாகக் கருதி அஞ்சப்படும்.

சாலமன் பாப்பையா விளக்கம்:

நமக்கு நன்மை என்று பிறருக்குச் செய்யும் தீமைகள், நமக்குத் தீமையே தருவதால், தீமைகளைத் தீயினும் கொடியனவாக எண்ணிச் செய்ய அஞ்ச வேண்டும்.

கலைஞர் விளக்கம்:

தீய செயல்களால் தீமையே விளையும் என்பதால் அச்செயல்களைத் தீயை விடக் கொடுமையானவையாகக் கருதி அவற்றைச் செய்திட அஞ்சிட வேண்டும்.

English Couplet 202:

Since evils new from evils ever grow,

Evil than fire works out more dreaded woe.

Couplet Explanation:

Because evil produces evil, therefore should evil be feared more than fire.

Transliteration(Tamil to English):

theeyavai theeya payaththalaal theeyavai

theeyinum anjap padum

VIDEOS

Recommended