தினம் ஒரு திருக்குறள் 21-10-2024

தினம் ஒரு திருக்குறள்

UPDATED: Oct 20, 2024, 6:24:20 PM

குறள் 259:

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர்செகுத் துண்ணாமை நன்று.

மு.வரதராசன் விளக்கம்:

நெய் முதலியப் பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலை விட ஒன்றன் உயிரைக்கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது.

சாலமன் பாப்பையா விளக்கம்:

(மந்திரம் சொல்லித் தேவர்களுக்கு இடும் உணவாகிய) அவிகளைத் தீயில் போட்டு ஆயிரம் வேள்வி செய்வதைக் காட்டிலும் ஓர் உயிரைப் போக்கி அதன் உடம்பை உண்ணாமல் இருப்பது நல்லது.

கலைஞர் விளக்கம்:

நெய் போன்ற பொருள்களைத் தீயிலிட்டு ஆயிரம் வேள்விகளை நடத்துவதைவிட உண்பதற்காக ஓர் உயிரைப் போக்காமலிருப்பது நல்லது.

English Couplet 259:

Than thousand rich oblations, with libations rare,

Better the flesh of slaughtered beings not to share.

Couplet Explanation:

Not to kill and eat (the flesh of) an animal, is better than the pouring forth of ghee etc., in a thousand sacrifices.

Transliteration(Tamil to English):

avisorinh thaayiram vaettalin ondran

uyirsekuth thuNNaamai nandru

VIDEOS

Recommended