தினம் ஒரு திருக்குறள் 18-04-2024

தினம் ஒரு திருக்குறள்

UPDATED: Apr 17, 2024, 3:28:46 PM

குறள் 120:

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்

பிறவும் தமபோல் செயின்.

மு.வரதராசன் விளக்கம்:

பிறர் பொருளையும் தம் பொருள் போல் போற்றிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரி‌ய நல்ல வாணிக முறையாகும்.

சாலமன் பாப்பையா விளக்கம்:

பிறர் பொருளையும் தம் பொருள் போலக் காத்து, வியாபாரம் செய்தால் வியாபாரிகளுக்கு நல்ல வியாபார முறை ஆகும்.

கலைஞர் விளக்கம்:

பிறர் பொருளாக இருப்பினும் அதனைத் தன் பொருளைப் போலவே கருதி நேர்மையுடன் வாணிகம் செய்தலே வணிக நெறியெனப்படும்.

English Couplet 120:

As thriving trader is the trader known,

Who guards another's interests as his own

Couplet Explanation:

The true merchandize of merchants is to guard and do by the things of others as they do by their own

Transliteration(Tamil to English):

VaaNikam seyvaarkku vaaNikam paeNip

piRavum thamapoal seyin

VIDEOS

Recommended