தினம் ஒரு திருக்குறள் 17-09‐2024

தினம் ஒரு திருக்குறள்

UPDATED: Sep 16, 2024, 6:03:09 PM

குறள் 228:

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை

வைத்திழக்கும் வன்க ணவர்.

மு.வரதராசன் விளக்கம்:

தாம் சேர்த்து வைத்துள்ள பொருளைப் பிறருக்குக் கொடுக்காமல் வைத்திருந்து பின் இழந்து விடும் வன் கண்மை உடையவர், பிறர்க்கு கொடுத்து மகிழும் மகிழ்ச்சியை அறியாரோ.

சாலமன் பாப்பையா விளக்கம்:

இல்லாதவர்க்குக் கொடுப்பதால் கொடுப்பவரும் பெறுபவரும் முகத்தாலும் மனத்தாலும் மகிழ்ச்சி அடைவர். பிறர்க்குக் கொடுக்காமல் பொருளைச் சேமித்து வைத்துப் பிறகு அதை இழந்துவிடும் கொடியவர்கள் அம்மகிழ்சியை அறியார்களோ?.

கலைஞர் விளக்கம்:

ஏழை எளியோர்க்கு எதுவும் அளித்திடாமல் ஈட்டிய பொருள் அனைத்தையும் இழந்திடும் ஈ.வு இரக்கமற்றோர், பிறர்க்கு வழங்கி மகிழ்வதில் ஏற்படும் இன்பத்தை அறியமாட்டாரோ?.

English Couplet 228:

Delight of glad'ning human hearts with gifts do they not know.

Men of unpitying eye, who hoard their wealth and lose it so?.

Couplet Explanation:

Do the hard-eyed who lay up and lose their possessions not know the happiness which springs from the pleasure of giving ?.

Transliteration(Tamil to English):

eeththuvakkum inpam aRiyaarkol thaamudaimai

vaiththizhakkum vankha Navar

VIDEOS

Recommended