தினம் ஒரு திருக்குறள் 15-09-2024

தினம் ஒரு திருக்குறள்

UPDATED: Sep 14, 2024, 7:19:47 PM

குறள் 226:

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்

பெற்றான் பொருள்வைப் புழி.

மு.வரதராசன் விளக்கம்:

வறியவரின் கடும்பசியைத் தீர்க்க வேண்டும் அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப் பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.

சாலமன் பாப்பையா விளக்கம்:

ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப் பெற்றவன் சேமித்து வைக்கும் இடம் அதுவே.

கலைஞர் விளக்கம்:

பட்டினி எனச் சொல்லி வந்தவரின் பசியைத் தீர்ப்பது வீண் போகாது. அதுவே, தான் தேடிய பொருளைப் பிற்காலத்தில் உதவுவதற்கு ஏற்பச் சேமித்து வைக்கக்கூடிய கருவூலமாகும்.

English Couplet 226:

Let man relieve the wasting hunger men endure;

For treasure gained thus finds he treasure-house secure.

Couplet Explanation:

The removal of the killing hunger of the poor is the place for one to lay up his wealth.

Transliteration(Tamil to English):

atraar azhipasi theerththal aqdhoruvan

petraan poruLvaip puzhi

VIDEOS

Recommended