தினம் ஒரு திருக்குறள் 15-07-2024

தினம் ஒரு திருக்குறள்

UPDATED: Jul 14, 2024, 7:16:18 PM

குறள் 195:

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில

நீர்மை யுடையார் சொலின்.

மு.வரதராசன் விளக்கம்:

பயனில்லாத சொற்களை நல்ல பண்பு உடையவர் சொல்லுவாரானால், அவனுடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கிவிடும்.

சாலமன் பாப்பையா விளக்கம்:

இனிய குணத்தவர் பயனற்ற சொற்களைச் சொன்னால், அவர் பெருமையும், புகழும் அப்பொழுதே நீங்கிவிடும்.

கலைஞர் விளக்கம்:

நல்ல பண்புடையவர் பயனில்லாத சொற்களைக் கூறுவாரானால் அவருடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கி விடும்.

English Couplet 195:

Gone are both fame and boasted excellence,

When men of worth speak of words devoid of sense.

Couplet Explanation:

If the good speak vain words their eminence and excellence will leave them.

Transliteration(Tamil to English):

seermai siRappotu neengum payanila

neermai yudaiyaar solin

VIDEOS

Recommended