தினம் ஒரு திருக்குறள் 12-06-2024

தினம் ஒரு திருக்குறள்

UPDATED: Jun 11, 2024, 6:37:19 PM

குறள் 167:

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்

தவ்வையைக் காட்டி விடும்..

மு.வரதராசன் விளக்கம்:

பொறாமை உடையவனைத் திருமகள் கண்டு பொறாமைப்பட்டுத் தன் தமக்கைக்கு அவனைக் காட்டி நீங்கி விடுவாள்.

சாலமன் பாப்பையா விளக்கம்:

பிறர் உயர்வு கண்டு பொறாமைப்படுபவனைப் பார்க்கும் திருமகள் வெறுப்புக் கொண்டு தன் அக்காள் மூதேவிக்கு அவனை அடையாளம் காட்டிவிட்டு விலகிப் போய்விடுவாள்.

கலைஞர் விளக்கம்:

செல்வத்தை இலக்குமி என்றும், வறுமையை அவளது அக்காள் மூதேவி என்றும் வர்ணிப்பதுண்டு. பொறாமைக் குணம் கொண்டவனை அக்காளுக்கு அடையாளம் காட்டிவிட்டுத் தங்கை இலக்குமி அவனைவிட்டு அகன்று விடுவாள்.

English Couplet 167:

From envious man good fortune's goddess turns away,

Grudging him good, and points him out misfortune's prey.

Couplet Explanation:

Lakshmi envying (the prosperity) of the envious man will depart and introduce him to her sister.

Transliteration(Tamil to English):

avviththu azhukkaaRu udaiyaanaich cheyyavaL

thavvaiyaik kaatti vidum

VIDEOS

Recommended