தினம் ஒரு திருக்குறள் 08-10-2024

தினம் ஒரு திருக்குறள்

UPDATED: Oct 7, 2024, 6:25:18 PM

குறள் 247:

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு

இவ்வுலகம் இல்லாகி யாங்கு.

மு.வரதராசன் விளக்கம்:

பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகத்து வாழ்க்கை இல்லாதவாறு போல உயிர்களிடத்தில் அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகத்து வாழ்க்கை இல்லையாம்.

சாலமன் பாப்பையா விளக்கம்:

பொருள் இல்லாதவர்க்கு இப்பூவுலக இன்பம் இல்லாதது போலவே, அருள் இல்லாதவர்க்கு மேல் உலக இன்பம் இல்லை.

கலைஞர் விளக்கம்:

பொருள் இல்லாதவர்களுக்கு இல்லற வாழ்க்கை சிறப்பாக இராது. அதுபோலவே கருணை உள்ளம் இல்லாதவர்களின் துறவற வாழ்க்கையும் சிறப்பாக அமையாது.

English Couplet 247:

As to impoverished men this present world is not;

The 'graceless' in you world have neither part nor lot.

Couplet Explanation:

As this world is not for those who are without wealth, so that world is not for those who are without kindness.

Transliteration(Tamil to English):

aruLillaarkku avvulakam illai poruLillaarkku

ivvulakam illaaki yaangu

VIDEOS

Recommended