தினம் ஒரு திருக்குறள் 07-09-2024

தினம் ஒரு திருக்குறள்

UPDATED: Sep 6, 2024, 6:03:44 PM

குறள் 219:

நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர

செய்யாது அமைகலா வாறு.

மு.வரதராசன் விளக்கம்:

ஒப்புரவாகிய நற்பண்பு உடையவன் வறுமை உடையவனாதல், செய்யத்தக்க உதவிகளைச் செய்யாமல் வருந்துகின்ற தன்மையாகும்.

சாலமன் பாப்பையா விளக்கம்:

உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவும் உள்ளம் உடையவன் வறியவன் ஆவது, செய்யக்கூடிய உதவிகளைப் பிறர்க்குச் செய்யமுடியாது வருந்தும் போதுதான்.

கலைஞர் விளக்கம்:

பிறர்க்கு உதவி செய்வதையே கடமையாகக் கொண்ட பெருந்தகையாளன் ஒருவன், வறுமையடைந்து விட்டான் என்பதை உணர்த்துவது அவனால் பிறர்க்கு உதவிட முடியாமல் செயலிழந்து போகும் நிலைமைதான்.

English Couplet 219:

The kindly-hearted man is poor in this alone,

When power of doing deeds of goodness he finds none.

Couplet Explanation:

The poverty of a benevolent man, is nothing but his inability to exercise the same.

Transliteration(Tamil to English):

nayanutaiyaan nalkoorndhaa naadhal seyumnheera

seyyaadhu amaikalaa vaaRu

VIDEOS

Recommended