தினம் ஒரு திருக்குறள் 07-06-2024

தினம் ஒரு திருக்குறள்

UPDATED: Jun 6, 2024, 6:08:20 PM

குறள் 162:

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்

அழுக்காற்றின் அன்மை பெறின்.

மு.வரதராசன் விளக்கம்:

யாரிடத்திலும் பொறாமை இல்லாதிருக்கப் பெற்றால், ஒருவன் பெறத்தக்க மேம்பாடான பேறுகளில் அதற்கு ஒப்பானது வேறொன்றும் இல்லை.

சாலமன் பாப்பையா விளக்கம்:

எவர் இடத்தும் பொறாமை கொள்ளாதிருப்பதை ஒருவன் பெற்றால் சீரிய சிறப்புகளுள் அது போன்றது வேறு இல்லை.

கலைஞர் விளக்கம்:

யாரிடமும் பொறாமை கொள்ளாத பண்பு ஒருவர்க்கு வாய்க்கப் பெறுமேயானால் அதற்கு மேலான பேறு அவருக்கு வேறு எதுவுமில்லை.

English Couplet 162:

If man can learn to envy none on earth,

'Tis richest gift, -beyond compare its worth.

Couplet Explanation:

Amongst all attainable excellences there is none equal to that of being free from envy towords others

Transliteration(Tamil to English):

vizhuppaetrin aqdhoppadhu illaiyaar maattum

azhukkaatrin anmai peRin

VIDEOS

Recommended