தினம் ஒரு திருக்குறள் 05-10-2024

தினம் ஒரு திருக்குறள்

UPDATED: Oct 4, 2024, 5:30:45 PM

குறள் 245:

அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்

மல்லன்மா ஞாலங் கரி.

மு.வரதராசன் விளக்கம்:

அருளுடையவராக வாழ்கின்றவர்களுக்குத் துன்பம் இல்லை, காற்று இயங்குகின்ற வளம் பெரிய உலகத்தில் வாழ்வோரே இதற்குச் சான்று ஆவர்.

சாலமன் பாப்பையா விளக்கம்:

அருள் உடையவர்க்கு இவ்வுலகில் துன்பம் வராது; இதற்குக் காற்று உலவும், வளம் மிக்க இந்தப் பேருலகமே சான்று.

கலைஞர் விளக்கம்:

உள்ளத்தில் ஊறிடும் அருளின் இயக்கத்தினால் துன்பத்தை உணராமல் கடமையாற்றலாம் என்பதற்கு, காற்றின் இயக்கத்தினால் வலிமையுடன் திகழும் இந்தப் பெரிய உலகமே சான்று.

English Couplet 245:

The The teeming earth's vast realm, round which the wild winds blow,

Is witness, men of 'grace' no woeful want shall know.

Couplet Explanation:

This great rich earth over which the wind blows, is a witness that sorrow never comes upon the kind-hearted.

Transliteration(Tamil to English):

allal aruLaaLvaarkku illai vaLivazhangum

mallanmaa GnaalanG kari

VIDEOS

Recommended