தினம் ஒரு திருக்குறள் 05-09-2024

தினம் ஒரு திருக்குறள்

UPDATED: Sep 4, 2024, 6:28:29 PM

குறள் 218:

இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்

கடனறி காட்சி யவர்.

மு.வரதராசன் விளக்கம்:

ஒப்புரவு அறிந்து ஒழுதலாகியத் தன் கடமை அறிந்த அறிவை உடையவர், செல்வ வளம் இல்லாத காலத்திலும் ஒப்புரவுக்குத் தளர மாட்டார்.

சாலமன் பாப்பையா விளக்கம்:

செய்யவேண்டிய கடமையை அறிந்த அறிவாளிகள், தம்மிடம் கொடுக்க இடம் இல்லாக் காலத்திலும், உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவத் தயங்க மாட்டார்கள்.

கலைஞர் விளக்கம்:

தம்மிடம் வளம் நீங்கி, வறுமை வந்துற்ற காலத்திலும், பிறர்க்கு உதவிடும் ஒப்புரவில் தளராதவர், கடமையுணர்ந்த தகைமையாளர்.

English Couplet 218:

E'en when resources fall, they weary not of 'kindness due,'

They to whom Duty's self appears in vision true.

Couplet Explanation:

The wise who know what is duty will not scant their benevolence even when they are without wealth.

Transliteration(Tamil to English):

itanil paruvaththum oppuraviRku olkaar

katanaRi kaatchi yavar

VIDEOS

Recommended