தினம் ஒரு திருக்குறள் 03-09-2024

தினம் ஒரு திருக்குறள்

UPDATED: Sep 2, 2024, 6:39:22 PM

குறள் 216:

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்

நயனுடை யான்கண் படின்.

மு.வரதராசன் விளக்கம்:

ஒப்புராவாகிய நற்பண்பு உடையவனிடம் செல்வம் சேர்ந்தால் அஃது ஊரின் நடுவே உள்ள பயன் மிகுந்த மரம் பழங்கள் பழுத்தாற் போன்றது.

சாலமன் பாப்பையா விளக்கம்:

பிறரால் விரும்பப்படுபவனிடம் சேரும் செல்வம், உண்ணத் தகும், கனிதரும் மரம் ஊருக்கு உள்ளே பழுத்திருப்பதைப் போல எல்லார்க்கும் பொதுவாகும்.

கலைஞர் விளக்கம்:

ஈர நெஞ்சம் கொண்டவனிடம் செல்வம் சேருமேயானால் அது, ஊரின் நடுவே செழித்து வளர்ந்த மரம், பழுத்துக் குலுங்குவது போல எல்லோர்க்கும் பயன்படுவதாகும்.

English Couplet 216:

A tree that fruits in th' hamlet's central mart,

Is wealth that falls to men of liberal heart.

Couplet Explanation:

The wealth of a man (possessed of the virtue) of benevolence is like the ripening of a fruitful tree in the midst of a town.

Transliteration(Tamil to English):

payanmaram uLLoorp pazhuththatraal selvam

nayanutai yaan-kaN patin

VIDEOS

Recommended