தினம் ஒரு திருக்குறள் 03-06-2024

தினம் ஒரு திருக்குறள்

UPDATED: Jun 2, 2024, 7:11:58 PM

குறள் 160:

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்

இன்னாச்சொல் நோற்பாரின் பின்.

மு.வரதராசன் விளக்கம்:

உணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவர், பிறர் ‌சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான் பெரியவர் ஆவர்.

சாலமன் பாப்பையா விளக்கம்:

பிறர் சொல்லும் தீய சொற்களைப் பொறுத்துக் கொள்பவருக்கும் பின்புதான் விரதம் காரணமாக உணவைத் தவிர்த்து நோன்பு இருப்பவர் பெரியவர் ஆவார்.

கலைஞர் விளக்கம்:

பசி பொறுத்து உண்ணாநோன்பு இருக்கும் உறுதி படைத்தவர்கள் கூடப் பிறர் கூறும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்களுக்கு, அடுத்த நிலையில்தான் வைத்துப் போற்றப்படுவார்கள்.

English Couplet 160:

Though 'great' we deem the men that fast and suffer pain,

Who others' bitter words endure, the foremost place obtain.

Couplet Explanation:

Those who endure abstinence from food are great, next to those who endure the uncourteous speech of others.

Transliteration(Tamil to English):

uNNaadhu noaRpaar periyar piRarsollum

innaachchol noaRpaarin pin

VIDEOS

Recommended