• முகப்பு
  • குற்றம்
  • ஆட்டோ ரேசின் போது விபத்தில் சிக்கி 2 பேர் உயிர் இழப்பு, 8 பேர் காயம்.

ஆட்டோ ரேசின் போது விபத்தில் சிக்கி 2 பேர் உயிர் இழப்பு, 8 பேர் காயம்.

L.குமார்

UPDATED: Jun 17, 2024, 12:47:23 PM

கடந்த 15 ஆம் தேதி மீஞ்சூர் -வண்டலூர் 400 அடி வெளிவட்ட சாலையில் அடுத்தடுத்து 3 இருசக்கர வாகனங்கள் மோதி 2 பேர் உயிர் இழப்பு,3 படுகாயம் என தகவல் வெளியானது.

இந்த விபத்தில் குன்றத்தூரைச் சேர்ந்த மணி,அம்பத்தூரை சேர்ந்த சாம் சுந்தர் ஆகிய இருவர் உயிர் இழந்தனர்.

அதேபோல் மோகன கிருஷ்ணன்,/30 மாரிமுத்து/32,ஜெபேயர்/20 3 பேர் காயமடைந்தனர் என செங்குன்றம் போக்குவரத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

ஆனால் இது தொடர்பாக தற்போது இந்த விபத்திற்கு ஆட்டோ ரேஸ் காரணம் என தெரியவந்துள்ளது.

மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்ட சாலையில் செங்குன்றம் அருகே அருமந்தையில் 8 க்கும் மேற்பட்ட ஆட்டோகள் ரேஸில் ஈடுபட்ட போது விபத்து ஏற்பட்டு 2 பேர் உயிர் இழந்துள்ளது தெரியவந்துள்ளது.

ஆட்டோ ரேஸ் செங்குன்றம் அருகே வந்த போது ஆட்டோக்கள் ஒன்றோடு ஒன்று மோதி பாதுகாப்பு மற்றும் வேடிக்கை பார்க்க வந்த இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் உயிர் இழந்துள்ளனர்.

ஆட்டோ ரேஸ் குறித்து காட்சி வெளியான நிலையில் செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆட்டோ ரேஸ் குறித்து வெளியான வீடியோவில் 8 ஆட்டோக்கள் சாலையில் சீறி பாய்வதும் அதற்கு பாதுகாப்பாக 20 மேற்பட்ட இரு சக்கர வாகனம் மற்றும் 2 கார்கள் செல்வதும் பதிவாகியுள்ளது.

வெறும் 1001 ரூபாய் பந்தயம் கட்டி இந்த ரேஸ் நடைப்பெற்றுள்ளதாகவும், வாரத்தில் ஒரு நாள் இது போன்ற ரேஸ்கள் நடப்பதாகவும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் இந்த ரேஸ் தொடர்பாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதும் இதனை மூடி மறைப்பதாக விபத்து சார்பாக இருவர் உயிர் இருப்பதாக காவல்துறை சார்பில் தரப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது

ஆனால் இந்த ரேஸ் ஈடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து காலையில் பயணம் செய்யும் பொது மக்களை பாதுகாக்க வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது.

 

VIDEOS

Recommended