• முகப்பு
  • குற்றம்
  • புத்தளம் பகுதியில் சுமார் 1 கோடி 30 இலட்சம் பெறுமதியான 3 கஜமுத்துக்களுடன் மூவர் கைது

புத்தளம் பகுதியில் சுமார் 1 கோடி 30 இலட்சம் பெறுமதியான 3 கஜமுத்துக்களுடன் மூவர் கைது

ஏ. என். எம். முஸ்பிக்

UPDATED: Aug 17, 2024, 6:37:17 AM

 சுமார் 1 கோடி ரூபா 30 இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்ய முயன்ற 3 கஜமுத்துக்களுடன் மூவர் நேற்று இரவு புத்தளம் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கஜமுத்துக்களை விற்பனை செய்ய உள்ளதாக பாலாவி விமானப்படைப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய புத்தளம் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருடன் இனைந்து குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சுற்றிவளைப்பு புத்தளம் கொழும்பு முகத்திடலுக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

இதன்போது 1கோடி 30 இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்யமுற்பட்ட 3 கஜமுத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

புத்தளம் மற்றும் மாவனெல்ல பகுதிகளைச் சேர்ந்த மூவர் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் கைப்பற்றப்பட்ட கஜமுத்துக்களையும் மேலதிக நடவடிக்ககளுக்காக புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் இதன்போது தெரிவித்தனர்.

 

VIDEOS

Recommended