• முகப்பு
  • குற்றம்
  • காட்டுமன்னார்கோவிலில் யூடியூப் பார்த்து பெட்ரோல் குண்டு தயாரித்தவர்க்கு விலங்கு மாற்றிய போலீசார் 

காட்டுமன்னார்கோவிலில் யூடியூப் பார்த்து பெட்ரோல் குண்டு தயாரித்தவர்க்கு விலங்கு மாற்றிய போலீசார் 

சண்முகம்

UPDATED: Apr 28, 2024, 7:36:00 PM

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் அருகே சிதம்பரம் மீனசுருட்டி பைபாஸ் சாலையில் உள்ள மேம்பாலத்தில் குடிபோதையில் இளைஞர் ஒருவர் பீர்பாட்டிலில் பெட்ரோலை ஊற்றி பற்ற வைத்து சாலையில் தூக்கி வீசப்பட்ட சம்பவத்தில்

 

அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்ததின் பேரில் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று இரண்டு நாட்களாக விசாரணை செய்த போலீசார், அவர் அருகே உள்ள கக்கன் நகரை சேர்ந்த ஆனந்தராஜ் (23) என்பதும் தான் விளையாட்டாக யூடியூபை பார்த்து பெட்ரோல் குண்டு தயாரித்து சாலையில் வீசி பரிசோதித்து பார்த்ததாக போலீசாரிடம் தெரிவித்தார்.

இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கும்போது சமூக வலைதளங்களை பார்த்து இது போன்ற சம்பவங்கள் நிகழ்வது அதிகரித்து வருவதால் அரசின் சைபர் கிரைம் போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

 

VIDEOS

Recommended