• முகப்பு
  • குற்றம்
  • கும்பகோணத்தில் இருந்து சென்னை  நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு.

கும்பகோணத்தில் இருந்து சென்னை  நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு.

ரமேஷ்

UPDATED: Jun 10, 2024, 5:21:02 AM

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பகுதியில் கும்பகோணத்தில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது அரசு பேருந்தில் மர்ம நபர்களால் அதன் கண்ணாடி உடைக்கப்பட்டது.

உடனடியாக பேருந்து காவல் நிலையம் கொண்டு சென்று நிறுத்தப்பட்டது.அரசுப் பேருந்தின் பின்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

பேருந்தில் குறைந்த அளவு பயணிகளே இருந்ததால் அசம்பாவிதம் ஏதும் நேரவில்லை.

ஏற்கனவே புவனகிரி பகுதியில் இரண்டு அரசு பேருந்துகள் கண்ணாடி உடைக்கப்பட்டது என்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் தற்போது சேத்தியாத்தோப்பு பகுதியில்  அரசு பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத விடியா ஆட்சியில் அரசு பேருந்துகளையும் பாதுகாப்பாக இயக்க முடியாத நிலையிரு ப்பதாக பலரும் தெரிவித்து வருகின்றனர்.

 

VIDEOS

RELATED NEWS

Recommended