போலி வாரிசு சான்றிதழ் மூலம் பட்டா மாற்றம் செய்தவர் கைது!

பரணி

UPDATED: Jun 16, 2024, 7:19:11 PM

குடியாத்தம் சார்பாக அலுவலகத்தில் சார்பாக பணிபுரிந்து வரும் பிரகாஷ் என்பவர் கடந்த ஜூன் 10ஆம் தேதி வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட குற்றப்பிரிவு புகார் ஒன்றை அளித்தார்.

அதில் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த சரவணன் அவரது மனைவி சுஷ்மிதா மற்றும் பிரசாந்த் ஆகியோர் இணைந்து போலியான வாரிசு சான்றிதழ் மற்றும் ஆவணங்களை தயாரித்து தாழையாத்தம் கிராமத்தில் உள்ள சரவணன் என்பவர் தந்தையின் பெயரில் உள்ள வீட்டை தன் பெயருக்கு மாற்றம் செய்து பின்னர் தனது மனைவியின் பெயருக்கு மாற்றம் செய்து ஏமாற்றியுள்ளனர்.

ஆகவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது அதன் அடிப்படையில் குற்ற இன்ஸ்பெக்டர் பிரபு ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் சரவணன் கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

 

VIDEOS

Recommended