• முகப்பு
  • குற்றம்
  • பாண்டிச்சேரி மாநில மதுபானத்தை ஆந்திர மாநிலத்திற்கு காரில் கடத்தல்.

பாண்டிச்சேரி மாநில மதுபானத்தை ஆந்திர மாநிலத்திற்கு காரில் கடத்தல்.

லட்சுமி காந்த்

UPDATED: Jul 26, 2024, 10:35:11 AM

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர்

பூங்கா அருகே காஞ்சிபுரம் சாலையில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த ஒரு சொகுசு காரை கவனித்த காவல்துறையினர் காரின் உரிமையாளரிடம் விசாரித்தனர்.

அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த காவலர்கள் அந்தக் காரை சோதனை செய்தனர்.

அந்தக் காரில் பெட்டி பெட்டியாக பாண்டிச்சேரி மாநில அரசு மதுபானங்கள் கடத்தப்பட்டதை கண்டு மிகுந்த அதிர்ச்சி உற்றனர்.

பாண்டிச்சேரி மதுபானம்

மதுபானங்களை பறிமுதல் செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய அந்த காரையும் ,ஆந்திர மாநில நபரையும் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். 

விசாரணையில் , மதுபானங்களை கடத்தி வந்த நபர் பெயர் அரிபிரசாத் வயது 38 என்றும் ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் எனவும் தெரிய வந்தது.

பாண்டிச்சேரி மாநிலத்தில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு அரசு மதுபானங்களை எடுத்துச் சென்று அதிக விலைக்கு விற்பனை செய்து லாபம் பார்த்து வந்ததாக தெரிவித்துள்ளார்.

Latest District News in Tamil

தற்போது அவர் கடத்திய 1500 மதுபான பாட்டில்கள் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பு இருக்கும் என காவல்துறையினர் தெரிவித்தனர். 

மேலும் பிடிபட்ட ஆந்திர மாநில நபரிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றார்கள்.

 

VIDEOS

Recommended