• முகப்பு
  • குற்றம்
  • திருச்சியில் திமுக பிரமுகரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு இருசக்கர வாகனம் தீவைப்பு

திருச்சியில் திமுக பிரமுகரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு இருசக்கர வாகனம் தீவைப்பு

JK

UPDATED: Apr 20, 2024, 9:51:28 AM

திருச்சி சின்னக்கடை வீதி அரபிகுள தெருவை சேர்ந்தவர் முருகேசன் இவரது மகன் சுரேஷ்குமார் (45). இவர் அடகு நகைகளை மீட்டு விற்பனை செய்து வரும் நிறுவனத்தில் பங்குதாரர்.

திமுக பிரமுகர் ஆவார். இவருக்கு திருச்சி வடக்குத் தாராநல்லூர் பகுதியில் சொந்தமான பாலபத்திரகாளி அம்மன் கோயில் உள்ளது.

இந்தக் கோயிலுக்கு அருகில் சுமார் 10,000 சதுர அடி இடம் உள்ளது. இந்த இடத்தை கோவில் நிர்வாகம் பராமரித்து வருகிறது. கோவில் நிர்வாகத்தில் காந்திமார்க்கெட்டில் பழக்கடை நடத்தி வரும் சரவணன் என்பவர் பொருளாளராக பதவி வகித்து வருகிறார். இவர் சுரேஷ்குமாரின் நண்பரும் ஆவார்.

சரவணன் கோயிலுக்கு சொந்தமான இடத்தை விற்று விட்டதாக கோவில் கமிட்டியில் உள்ளவர்கள் சிலர் சுரேஷ்குமாரிடத்தில் புகார் கூறியுள்ளனர்.

ஆனால் இது குறித்து சுரேஷ்குமார் சரவணனிடம் எதையும் கேட்கவில்லை. இந்நிலையில் சுரேஷ்குமாரின் தூண்டுதலின் பெயரில் தான் இடம் தொடர்பான பிரச்சனையை கமிட்டியில் சிலர் எழுப்பி வருகின்றனர் என்ற கோபத்தில் சரவணன் நேற்று இரவு சுரேஷ்குமாரின் வீட்டிற்கு சென்று தகராறு செய்துவிட்டு சென்றுள்ளார்.

மீண்டும் இன்று அதிகாலை சுமார் மூன்று முப்பது மணி அளவில் சரவணன் மற்றும் அவரது கடையில் பணிபுரியும் கார்த்திக் என்ற நபருடன் சுரேஷ்குமார் வீட்டுக்கு சென்று பாட்டிலில் பெட்ரோலை ஊற்றி நெருப்பு வைத்து வீட்டின் மேல் வீசி உள்ளார.

மேலும் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த சுரேஷ்குமாரின் இருசக்கர வாகனத்தையும் பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். ஆனால் இருசக்கர வாகனம் தீயில் முற்றிலுமாக எரிந்து சேதமாகியது.

இச்சம்பவம் குறித்து சுரேஷ்குமார் திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

  • 1

VIDEOS

Recommended