திருச்சி விமான நிலையத்தில் ஒரு கோடி மதிப்பு தங்கம் கடத்தல்.

JK

UPDATED: May 29, 2024, 1:43:05 PM

திருச்சி விமான நிலையத்திற்கு சிங்கப்பூரிலிருந்து ஸ்கூட்டி விமானம இன்று காலை நூற்றுக்கணக்கான பயணிகள் வந்தனர். அவர்களுடைய ஆவணங்கள் மற்றும் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்பொழுது சந்தேகத்திற்கு இடமாக நடந்து கொண்ட பயணி அழைத்து  சோதனை செய்த போது முழங்காலில் பயன்படுத்தும் நீல்கேப் என்னும் காலில் அணியும் பேண்டில் மறைத்து கொண்டு வந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

அதில் 1கிலோ 424 கிராம் எடையுள்ள தங்க கட்டில் மற்றும் செயின்களை மறைத்து வைத்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதை தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்து அதிகாரிகள் அந்த பயணியிடம் யாருக்காக கொண்டு வருகிறீர்கள் என பல்வேறு கோணத்தில்

விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட நகையின் மதிப்பு ஒரு கோடியே மூன்று லட்சம் எனசுங்கத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 

VIDEOS

Recommended