• முகப்பு
  • குற்றம்
  • நியூ செல்வி கோல்டு லோன் பைனான்ஸ் நிறுவனம் அடகு வைத்த நகைகளை மோசடி.

நியூ செல்வி கோல்டு லோன் பைனான்ஸ் நிறுவனம் அடகு வைத்த நகைகளை மோசடி.

கார்மேகம்

UPDATED: May 12, 2024, 7:19:41 AM

ராமநாதபுரம்‌ மாவட்டம் திருப்புல்லாணியில்‌ நியூ செல்வி கோல்டு லோன் பைனான்ஸ் என்ற நிறுவனம் கடந்த 2012 - ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்ததாகவும் அந்த நிறுவனத்தில் அடகு வைத்த நகைகளை மோசடி செய்துவிட்டு நிறுவனத்தை இரவோடு இரவாக காலி செய்துவிட்டு நிறுவனத்தை மூடிவிட்டதாகவும் அது குறித்து 09/10/2023- ம் ஆண்டு திருப்புல்லாணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அது சம்பந்தமாக திருப்புல்லாணி போலீஸ்சார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் நகையை இழந்தவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் நகையை இழந்தவர்கள் அனைவரும் நகையை மீட்டுக் கொடுக்கவும் மோசடியில் ஈடுபட்ட நிறுவன உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கவும் காவல் துறையை வலியுறுத்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

 

VIDEOS

Recommended