• முகப்பு
  • குற்றம்
  • திருவேற்காட்டில் காதலுக்கு தூது செல்ல மறுத்த சிறுவனின் மூக்கில் குத்து விட்ட நபர்

திருவேற்காட்டில் காதலுக்கு தூது செல்ல மறுத்த சிறுவனின் மூக்கில் குத்து விட்ட நபர்

S.முருகன்

UPDATED: May 27, 2024, 10:52:22 AM

District News

திருவேற்காடை சேர்ந்த 15 வயது சிறுவன் நேற்று முன்தினம் அவரது வீட்டு வாசலில் அமர்ந்து செல்போனில் விளையாடி கொண்டிருந்தார்.

அங்கு மது போதையில் வந்த திருவேற்காடு, அன்பு நகரை சேர்ந்தவர் செல்வம்(25), தான் இந்த பகுதியில் பெரிய ரவுடி எனவும் தனது காதலுக்கு தூது போக வற்புறுத்தி உள்ளார்.

உங்களுக்கு வேண்டும் என்றால் நீங்களே போய் நீங்களே சென்று சொல்லுங்கள் என்னால் முடியாது என சிறுவன் கூறியுள்ளார்.

Latest District News

இதனால் ஆத்திரமடைந்த செல்வம் தனது நண்பர்களை அழைத்து வந்து சிறுவனின் மூக்கில் தாக்கியதில் படுகாயம் ஏற்பட்டது. இது குறித்து திருவேற்காடு போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் திருவேற்காடு போலீசார் செல்வத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

VIDEOS

Recommended