கும்பகோணத்தில் 17 வயது பெண்ணிற்கு நடக்க இருந்த திருமணம்.

ரமேஷ்

UPDATED: May 27, 2024, 10:50:48 AM

District News

கும்பகோணத்தில் பழைய பாலக்கரை உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 17 வயது சிறுமிக்கு திருமணம் நடக்கவிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் காவல்துறையினர் தாலி கட்டுவதற்கு சிறிது நேரம் உள்ள நிலையில் , மணப்பெண் வீட்டாரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பெண்ணிற்கு 18 வயது பூர்த்தியாக இன்னும் மூன்று மாதங்கள் இருப்பது தெரியவந்தது.

Kumbakonam District News

இதையடுத்து சிறுமி மற்றும் அவரது குடும்பத்தார் மற்றும் மணமகன் குடும்பத்தினரை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

சிறுமிக்கு 18 வயது பூர்த்தி ஆவதற்கு முன்பாக மீண்டும் திருமண ஏற்பாடு செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து சிறுமியின் பெற்றோர் மற்றும் மணமகன் வீட்டாரிடம் கைப்பட எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தனர்.

18 வயது பூர்த்தியாகாத நிலையில் பெண்ணுக்கு திருமண ஏற்பாடு செய்திருப்பதை அறிந்த இரு வீட்டார் உறவினர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆனால் திருமண மண்டபத்தில் டிஜே மியூசிக் மற்றும் ஆடல் பாடல் கொண்டாட்டம் நடைபெற்றது. உறவினர்கள் உணவு சாப்பிட்டு மணமகளுக்கு மெய் வைக்கப்பட்டன.

மணமகள் வீட்டார் மணமகனுக்கு கட்டில், பீரோ, இருசக்கர வாகனம் பாத்திரங்கள் பர்னிச்சர் பொருட்கள் மண்டபத்தில் அடிக்க வைக்கப்பட்டிருந்தன.

 

VIDEOS

Recommended