• முகப்பு
  • குற்றம்
  • லொஹான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளரின் மரணம் தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம்

லொஹான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளரின் மரணம் தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம்

இர்ஷாத் றஹ்மத்துல்லா

UPDATED: Oct 22, 2024, 3:57:39 AM

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளரின் மரணம் தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கண்டி கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் உள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சரின் கட்சி அலுவலகத்தில் அவரது தனிப்பட்ட செயலாளர் பீ.எம்.ஏ.எஸ். பஸ்நாயக்க நேற்று சடலமாக மீட்கப்பட்டார்.

original/whatsapp-image-2024-10-22-at-09
இவர் கட்டுகஸ்தோட்டை அலதெனிய பிரதேசத்தில் வசிக்கும் 50 வயதுடையவர். கண்டி பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுருத்த பண்டாரநாயக்க தலைமையில் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டதில் இந்த மரணம் தற்கொலை என தெரியவந்துள்ளது.

தனிச்செயலாளர் தனது சொந்த கையெழுத்து மற்றும் கையெழுத்துடன் எழுதிய ஆவனம் ஒன்றும் கிடைத்துள்மை குறிப்பிட்த்தக்கது.

original/img-20241018-wa0349



VIDEOS

Recommended