• முகப்பு
  • குற்றம்
  • புதையல் தோண்டிய இருவரை கிராந்துருகோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்

புதையல் தோண்டிய இருவரை கிராந்துருகோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்

ராமு தனராஜா

UPDATED: May 11, 2024, 4:53:18 AM

கிராந்துருகோட்டை பகுதியில் தனி நபருக்கு சொந்தமான காணி ஒன்றில் புதையல் தோண்டுவதாக கிராந்துருகோட்டை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த பகுதியை சுற்றிவளைத்து தேடுதலை மேற்கொண்ட போது புதையல் தோண்டி கொண்டிருந்த இருவரை கிராந்துருகோட்டை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


அத்துடன் பகுதியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்த படும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இரு சந்தேக நபர்களையும் இன்றைய தினம் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை கிராந்துருகோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 



 

VIDEOS

Recommended