• முகப்பு
  • குற்றம்
  • எல்லை பாதுகாப்பு படை வீரரை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓட்டம்.

எல்லை பாதுகாப்பு படை வீரரை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓட்டம்.

லட்சுமி காந்த்

UPDATED: Jun 11, 2024, 6:31:29 PM

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த ஏரிவாய் பகுதியை சேர்ந்தவர் கனகசபாபதி (24). திருமணமாகவில்லை .எல்லை பாதுகாப்பு படை வீரராக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பணியில் சேர்ந்துள்ளார்.

இந்த நிலையில் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கான 40 நாள் விடுப்பில், அவரது சொந்த ஊரான ஊத்துக்காடு அடுத்த ஏரிவாய் கிராமத்திற்க்கு கடந்த மாதம் 24 ஆம் தேதி வந்தார்.

ஞாயிற்றுக்கிழமை மாலை தனது நண்பரான ஆனந்தராஜ் உடன் வாலாஜாபாத் அடுத்த ஊத்துக்காடு அரசு மதுபான கடையில் மது வாங்கிக் கொண்டு இருவரும் அமர்ந்து மது அருந்தி வந்தனர். 

இந்த நிலையில் இவர்களுக்கும் அங்கு ஏற்கனவே மது அருந்தி கொண்டிருந்த கும்பலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது .

அதில் அங்கிருந்த மர்ம கும்பல் கனகசபாபதி மற்றும் ஆனந்தராஜ் ஆகிய இருவரையும் கற்கள் மற்றும் கைகளால் சரமாரியாக தாக்கி இருவரையும் கத்திகளால் குத்து விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

கத்திக்குத்து காயங்களுடன் இருவரும் அங்கிருந்து , புல்லட் வாகனத்தில் ஏறி மருத்துவமனைக்கு சென்ற கொண்டிருந்த போது , எல்லை பாதுகாப்பு படை வீரரான கனகசபாபதிக்கு அதிகளவு இரத்தபோக்கு ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

இதனையெடுத்து கத்திக்குத்து காயங்களுடன் இருந்த இருவரையும் பொதுமக்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் கனகசபாபதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பரான ஆனந்தராஜ் தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார்.

பணியில் சேர்ந்து ஒன்றரை வருடங்களே ஆன நிலையில் விடுமுறைக்கு வீடு திரும்பிய எல்லை பாதுகாப்பு படை வீரர் கத்திகுத்து பட்டு உயிரிழந்தது அக்கிராம மக்களிடையே பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

 

VIDEOS

Recommended