• முகப்பு
  • குற்றம்
  • முதலமைச்சரிடம் கஞ்சாவுடன் சென்று புகார் அளித்த பாஜக பிரமுகர் கைது.

முதலமைச்சரிடம் கஞ்சாவுடன் சென்று புகார் அளித்த பாஜக பிரமுகர் கைது.

கோபிநாத்

UPDATED: Apr 29, 2024, 6:32:22 PM

கொடைக்கானலில் ஓய்வெடுப்பதற்காக இன்று(ஏப்.29) முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது குடும்பத்துடன் மதுரை விமான நிலையம் வந்தார்.

அப்போது அங்கு வந்த பாஜக செயற்குழு உறுப்பினர் சங்கரபாண்டி தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் அதிகரித்திருப்பதாக கூறி, கஞ்சாவுடன் மனு அளிக்க சென்றார்.

அவரை தடுத்து நிறுத்திய போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் தற்போது அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

  • 1

VIDEOS

Recommended