• முகப்பு
  • குற்றம்
  • மதுரவாயலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய பிரபல கொள்ளையன் கைது

மதுரவாயலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய பிரபல கொள்ளையன் கைது

S.முருகன்

UPDATED: Jun 23, 2024, 12:19:12 PM

மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம், ஆண்டாள் நகர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் இவரது மனைவி சாந்தி கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு அருகில் நடந்த உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 42 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து மதுரவாயல் போலீசில் புகார் அளித்ததின் பேரில் மதுரவாயல் குற்ற பிரிவு இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்தில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபரை தீவிரமாக தேடி வந்த நிலையில்  பூந்தமல்லி அடுத்த சென்னீர்க்குப்பம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பது தெரிய வந்தது

அவனை கைது செய்து போலீசார் விசாரணை செய்த போது பகல் நேரங்களில் பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு போலீசாருக்கு சவால் விடும் வகையில் பகல் நேரத்திலேயே பூட்டை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

மேலும் திருடிய நகைகளில் பாதி நகைகளை அவரது நண்பர்களுக்கு கொடுத்து உதவியுள்ளார் மீதம் உள்ள நகைகளை அடகு வைத்து உல்லாசமாக இருந்து வந்த இவன் மீது பல்வேறு கொள்ளை சம்பவங்கள் உட்பட 36 வழக்குகள் இருப்பது தெரியவந்தது

இவனிடமிருந்து 31 பவுன் நகைகளை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

பகல் நேரங்களில் தொடர்ந்து நோட்டமிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த இவன் அதில் வந்த பணத்தை வைத்து ஆன்லைனில் நண்பர்கள் மூலம் முதலீடு செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் தொடர்ந்து அவனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

VIDEOS

Recommended