தந்தையை கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை.

பரணி

UPDATED: Jun 16, 2024, 7:10:32 PM

ராணிப்பேட்டை மாவட்டம் வேப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர், முகமது இக்பால் இவரது மகன் இம்ரான் வயது 25 கடந்த 2022 மார்ச் மாதம் 18ஆம் தேதி முகமது இக்பாலை அவரது மகன் இம்ரனே கொலை செய்த குற்றத்திற்காக ஆற்காடு நகர காவல் நிலைய போலீசார் கைது செய்யப்பட்டு இம்ரான் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக ராணிப்பேட்டை கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் இரண்டில் வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில் இறுதி விசாரணை நடந்தது

விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் இம்ரனுக்கு ஆயுள் தண்டனையுடன் ரூபாய் 10,000 அபராதம் விதித்து நீதிபதி செல்வம் உத்தரவிட்டார்.

 

VIDEOS

Recommended