• முகப்பு
  • குற்றம்
  • அரக்கோணம் ரயில் நிலையத்தில் ஆந்திர மாநிலத்திற்கு கடத்த முயன்ற 900 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்.

அரக்கோணம் ரயில் நிலையத்தில் ஆந்திர மாநிலத்திற்கு கடத்த முயன்ற 900 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்.

பரணி

UPDATED: May 9, 2024, 7:11:46 PM

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்தில் ஆந்திர மாநிலத்திற்கு கடத்த முயன்ற 900 கிலோ ரேஷன் அரிசியை பறக்கும் படை வட்டாட்சியர் பறிமுதல் செய்தார்.

சென்னையில் இருந்து அரக்கோணம் வழியாக திருப்பதிக்கு செல்லும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் மற்றும் கடப்பா , புதுச்சேரி மின்சார ரயில்களில் ரேஷன் அரிசி கடத்துவ தாக மாவட்ட ஆட்சியர் வளர்மதிக்கு புகார் சென்றது.

இதை தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில் மாவட்ட பறக்கும் படை வட்டாட்-சியர் நடராஜன் அரக்கோணம் இரயில் நிலையத்தில் நான்காவது மற்றும் ஐந்தாவது நடைமேடையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப் போது பிளாட்பாரத்தில் ஓரத்தில் மறைவான இடத் தில் பதுக்கி வைத்திருந்த அரிசி மூட்டைகள் மற்றும் ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் ரயில்களிலும் சோதனை நடத்தியதில் பதுக்கி வைக்கப்பட்டி ருந்த மொத்தம் 900 கிலோ அரிசி மூட்டையை பறக் கும் படை வட்டாட்சியர் பறிமுதல் செய்து, அரக்கோணத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோனில் ஒப்படைத்தார்.

அதே நேரம் அரிசி கடத் தல் தொடர்பாக யாரையும் வட்டாட்சியர் பிடிக்கவில்லை.

 

VIDEOS

Recommended